பல்கலைக்கழகத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டமைக்காக பொலிஸார் மன்னிப்பு கோரினர்!

Date:

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர் .

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம்  நேற்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதுடன், கொழும்பில் பல வீதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒன்று கூடியிருந்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இந் நிலையில் சிலர் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்ததையடுத்து பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...