பேருவளையில் காணாமல் போயிருந்த சகோதரி சடலமாக மீட்பு!

Date:

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த பேருவளை முஸ்லிம் யுவதி (25) இன்று அதிகாலை பேருவளை ஆழ்கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கடந்த முதலாம் திகதி நள்ளிரவில் இருந்து காணாமல் போயிருந்தார். குறித்த யுவதியை தேடும் பணியில் பேருவளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் நேற்று பிற்பகல் பேருவளை ஆழ்கடலில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று பல மணித்தியாலங்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். என்றாலும் நேற்று சடலம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக மீண்டும் மீனவர்கள் அறிவித்ததை அடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று குறித்த சடலத்தை கரை சேர்த்துள்ளனர்.

காணாமல் போயிருந்த யுவதியின் தந்தை இது தனது மகளுடையது என்று சடலத்தை ஸ்தலத்திற்கு சென்று உறுதிப்படுத்தினார்.

அதன் பின்னர் மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி நஸ்ரின் அவர்கள் முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த யுவதிக்கு கடந்த பல வருடங்களாக அவ்வப்போது மனநலம் பாதிக்கப்படுவதாகவும், அதற்காக பல ஆண்டுகளாக உளவள சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...