மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!

Date:

டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் வசூலித்த எட்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் பிரகாரம் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

டெங்கு என்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச விலை 1,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டெங்கு நுண்ணுயிர்  பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரூ.3,000 வரை கட்டணம் வசூலித்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முழுமையான இரத்த எண்ணிக்கைப் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா வரை அறவிடப்படும் அதேவேளை அதிகபட்ச விலை 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்த 10 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...