ரமழான் மாதம் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்ததாக அமையட்டும்: சவூதித் தூதுவர்

Date:

ரமழான் மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

ரமழான் மாதத்தை முன்னிட்டு  அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, கருணையும், நற்செயல்களும் நிறைந்த, தவறுகள் மன்னிக்கப்படும், புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மிகப்பெரும் மகிழ்ச்சிகர நிகழ்வை நினைவுபடுத்தும் அருள் மிகு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு, அப்புனிதமிகு மாதத்தை அடைந்துகொள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நான் இலங்கையில் அடைந்துகொண்ட முதல் புனிதமிகு ரமழான் மாதம் இதுவாகும்.
ஆகவே அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் அருளும் நிறைந்ததாக அமையப் பெற பிரார்த்திக்கின்றேன்.

இப்புனிதமிகு மாதத்தினை அனைவரும் அடைந்து, நோன்பு நோற்று நற்கிரியைகளில் ஈடுபடும் பாக்கியத்தை அடையவும், அனைவரது நற் செயல்களையும் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்’ என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...