ரமழான் விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளுக்கு விசேட ஆன்மீக பயிற்சிப் பாசறை!

Date:

ரமழான் மாதத்தில் இளம் வயதினரின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஆன்மீக ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் நாஸ் கலாச்சார நிலையம் 7 நாள் வதிவிட பயிற்சிப் பாசறையொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.

பல தலைப்புகளில் மிகச்சிறந்த வளவாளர்களால் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளது.

அதற்கமைய, ஆண் பிள்ளைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரை இந்த பயிற்சி பாசறை இடம்பெறும்.

மேலும், பெண் பிள்ளைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அதேபோல பாதுகாப்பான இஸ்லாமிய சூழல், தரமான வளவாளர்கள், சகல வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதிகளுடன் இந்த பயிற்சி பாசறை நடைபெறவுள்ளது.

இதேவேளை இளம்பராயத்தினரை விழிப்புணர்வூட்டி, மார்க்க பற்றுடையவர்களாகவும், வருங்கால இஸ்லாமிய தலைவர்களாகவும் மாற்றி அமைக்கும் எமது இப்பணிக்கு பெற்றோர்கள் முன்னுரிமையளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

ரமழான் விடுமுறையில் இருக்கும் பிள்ளைகள் உறக்கத்திலும், வீணான விடயங்களிலும் நேரத்தை கழித்து விடக்கூடாது என்ற நல்லெண்ண நோக்கத்துடன் இந்த ரமழான் மாத விசேட ஆன்மீக வதிவிட பயிற்சிப் பாசறை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சிப் பாசறையில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பினால் பின்வரும் தொலைபேசி எண்களுடன் தொடர்புகொள்ளுங்கள்

0770670551
0112084814
0770521119

Popular

More like this
Related

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...