நம்மை முன்னோக்கிவரும் அருள்நிறைந்த றமழான் மாதத்தில், எமது பிள்ளைகள் உறக்கத்திலும், வீணான விடயங்களிலும் அவர்களது நேரங்களைக் கழித்துவிடக் கூடாது என எண்ணுகின்றீர்களா?
அப்படியாயின், பெற்றோர்களே !
இதோ உங்களுக்கானதோர் அரிய சந்தர்ப்பம்!
எமது இளம் வயதினரின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஆன்மீக ரீதியாக அவர்களை வலுப்படுத்தும் நோக்கில், எமது “நாஸ் கலாச்சார நிலயம்” 7 நாள் பயிற்சிநெறி ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
1. றமழான் மாதத்தின் முக்கியத்துவமும் அதன் சிறப்புக்களும்.
2. றமழான் மாதத்தில் இடம்பெற்ற வரலாற்று முக்கிய நிகழ்வுகள்
3. நபிகள் (ஸல்) அவர்கள் மீது அன்புகொள்ளல்.
4. மறுமைநாளின் அடையானங்கள்.
5. சுவனத்தை அடையும் வழிகள்
6. அல்குர்ஆன் ஓர் அற்புதம்
7. அல்குர்ஆன் இறங்கிய வரலாறும் அதன் வழிகாட்டல்களும்.
8. ஆரோக்கிய வாழ்வில் தொழுகையின் முக்கியத்துவம், பயன்பாடுகள்
9. இஸ்லாமியப் பார்வையில் சமூகத்தின் மீதுள்ள கடமைகள்.
போன்ற இன்னும் பல சிறந்த தலைப்புக்களில் தரமான வளவாளர்களால் விரிவுரைகள் நடாத்தப்படும்.
பெற்றோர்களே!
எம் இளம் சமுதாயத்தினரை விழிப்புனர்வூட்டி, மார்க்கப்பற்றுடையவர்களாகவும், எதிர்கால இஸ்லாமியத் தலைவர்களாகவும் அவர்களை மாற்றியமைக்கும் எம் இப்பாரிய இலக்கில் எம்மோடு நீங்களும் கைகொடுங்கள்.
👉பாதுகாப்பான, இஸ்லாமிய சூழல்.
👉சகல வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதிகள்.
👉சிறப்பாக வழிநடாத்தும் பயிற்சியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்.
இப் பயிற்சிநெறியில் உங்கள் பிள்ளையும் கலந்து, பயன்பெற விரும்பினால், இன்றே தொடர்புகொள்ளுங்கள்.
📌ஆண் பிள்ளைகளுக்கு 25.03.2023 முதல் 1.04.2023 வரை.
📌பெண் பிள்ளைகளுக்கு 02.04.2023 முதல் 08.04.2023 வரை.
இந்த பயிற்சிப் பாசறையில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பினால் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
பதிவுகளுக்கும். மேலதிக விபரங்களுக்கும்.
📱0770670551
📱0112084814
📱0770521119
ஏற்பாடு: நாஸ் கலாச்சார நிலையம்.