இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் இடைக்கால குழுவின் அறிக்கை கையளிப்பு

Date:

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக மற்றும் நிதி பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய இடைக்கால குழு தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி தலைமையில் விசேட குழுவொன்றை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் கால்பந்து அரசியலமைப்பு தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம், நிதி நிர்வாகம் மற்றும் ஆட்சேர்ப்பு பணியாளர்கள் போன்றவை குறித்து குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த  ஜனவரி 21, அன்று, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) FIFA கவுன்சிலின் பணியகம் எடுத்த முடிவின்படி, அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து சம்மேளனம் மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் இலங்கை கால்பந்து சம்மேளனம்   FIFA சட்டங்களின் 13வது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள அதன் அனைத்து உறுப்பினர் உரிமைகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...