ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய பொது இடங்களில் கெமராக்கள்!

Date:

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப் அணியாத இளம் பெண் மாஷா அமினி போலீஸ் காவலில் பலியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு பெண்கள் ஹிஜாப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களை கெமராக்கள் மூலம் கண்டறி ந்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ‘மதிப்புகளைப் பாதுகாத்தல், குடும்ப தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் மன ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பேணுதல் ஆகியவற்றின் பின்னணியில், சட்டத்திற்கு எதிரான எந்தவொரு தனிப்பட்ட அல்லது கூட்டு நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று Tasnim  செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஹிஜாப் அணியாததால் இரண்டு பெண்கள் மீது ஆண் ஒருவர் தயிர் சட்டியை வீசிய காட்சி இந்த மாத தொடக்கத்தில் வைரலானது. ஈரானின் ஆடைக் குறியீட்டை மீறியதற்காக இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...