உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் ராகுல் காந்தி!

Date:

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று (22) தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

பங்களாவை விட்டு வெளியேற காரில் ஏறும் முன், 19 ஆண்டுகளாக இந்த பங்களாவை கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், உண்மையைப் பேசியதற்கு விலையாக பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

உண்மையை பேசியதற்காக எந்த இழப்பீடும் கொடுக்க தயார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் கிடைத்த அதிகாரபூர்வ பங்களாவை ஏப்ரல் 22-ம் திகதி முன் காலி செய்யுமாறு லோக்சபா வீட்டு வசதி வாரியம் ராகுல் காந்தியிடம் தெரிவித்திருந்தது.

கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதாலும் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் மார்ச் 24 அன்று அறிவித்தது.

2004-ல் ராகுல் காந்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த அரசு பங்களாதான் இப்போது வரை அவரது வீடாக இருந்தது.

ஜன்பத்தில் உள்ள தனது தாய் சோனியா காந்தியின் வீட்டிற்கு தற்காலிகமாக செல்லவுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...