காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்கு காரணமான ஐ.எஸ். தலைவர் தலிபான்களால் கொலை!

Date:

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ஐஎஸ் தலைவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2021 இல் காபூலின் சர்வதேச விமான நிலையத்தின் அபே கேட் வெளியே ஒரு கொடிய தற்கொலை குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள்  மற்றும் 170 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினரால் தகர்க்கப்பட்டது.

9/11 தாக்குதல் என்று அறியப்படும் இந்தத் தாக்குதலைத்  தொடர்ந்து, தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்கப் படை ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இறக்கப்பட்டன.

அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறின. அபோது காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 183 பேர் உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...