சிரேஷ்ட ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் மறைவு: தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு!

Date:

தமிழ் ஊடகத்துறையில் சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக கொடிகட்டிப் பறந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.

வடக்கில் போர் நடந்த காலப்பகுதியில் நெருக்கடியான சூழலில் இருந்து செய்திகளை தேடி எடுத்து அதிகாரவர்க்கம் மறைக்க முற்பட்ட தகவல்களைக் கூட மிகவும் தைரியமாக நின்று வெளிப்படுத்துவதில் அதி திறமைசாலியாக செயல்பட்ட ஒருவராவார்.

அவரது ஊடக பங்களிப்பு தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரமன்றி சிங்களம் , ஆங்கிலம் போன்ற ஊடகங்களுக்கும் மிகவும் அவசியமானதாக இருந்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் நடத்திய பல ஊடக பயிற்சி செயலமர்வுகளுக்கு இணைப்பாளராகவும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடததக்கதாகும்.

அன்னாரது மறைவுக்கு நியூஸ் நவ் ஊடகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...