சிரேஷ்ட ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் மறைவு: தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு!

Date:

தமிழ் ஊடகத்துறையில் சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக கொடிகட்டிப் பறந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.

வடக்கில் போர் நடந்த காலப்பகுதியில் நெருக்கடியான சூழலில் இருந்து செய்திகளை தேடி எடுத்து அதிகாரவர்க்கம் மறைக்க முற்பட்ட தகவல்களைக் கூட மிகவும் தைரியமாக நின்று வெளிப்படுத்துவதில் அதி திறமைசாலியாக செயல்பட்ட ஒருவராவார்.

அவரது ஊடக பங்களிப்பு தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரமன்றி சிங்களம் , ஆங்கிலம் போன்ற ஊடகங்களுக்கும் மிகவும் அவசியமானதாக இருந்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் நடத்திய பல ஊடக பயிற்சி செயலமர்வுகளுக்கு இணைப்பாளராகவும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடததக்கதாகும்.

அன்னாரது மறைவுக்கு நியூஸ் நவ் ஊடகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...