தாவூதி போஹ்ரா சமூகத்தின் இப்தார் விருந்துக்கு முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு!

Date:

இலங்கையில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகம், இஸ்லாத்தின் புனித  ரமழான் மாதத்தை நினைவுகூரும் வகையில் பல முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இப்தார் மற்றும் இரவு விருந்து நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்வில் குர்ஆன் ஓதுதல் மற்றும் இஸ்லாமியப் பாடல்கள், அரங்கேற்றப்பட்டதுடன் பாரம்பரிய போஹ்ரா உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள், அறிஞர்கள், தூதுவர்கள், இராஜதந்திரிகள், வர்த்தக தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் ஜைனி,
உலகளாவிய தாவூதி போஹ்ரா சமூகத்தின் தலைவரான புனித சையத்னா முஃபத்தால் சைஃபுதீன் அனுப்பிய பிரார்த்தனை மற்றும் அமைதியின் முக்கிய செய்தியை வாசித்தார்.

மேலும் ரமழான் மாதத்தில், தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு – அவர்கள் உலகில் எங்கிருந்தாலும்   குறைந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு,  உதவுங்கள்,

 உலகம் போரிலிருந்து அகதிகள் நெருக்கடிகள், பருவநிலை மாற்றம் வரை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நமது அமைதியான நன்றியுணர்வை, அதிர்ஷ்டம் குறைந்த மற்றவர்களுக்கு உதவுவதற்கான உறுதியான தீர்மானமாக மாற்ற வேண்டும் என்று ஜைனி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த புனித மாதத்தில், கொழும்பில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்கள், அயலவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் எங்கள் பொதுவான மனிதநேயம் மற்றும் எங்களை இணைக்கும் உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒன்றுசேர்ந்துள்ளனர் என்பதை அறிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


நாம் ஒருவருக்கொருவர் உரையாடல்களில்  ஆறுதலை  தொடர்ந்து பெறவும், நன்றியுணர்வு, கருணை மற்றும் அன்புடன் உலகத்தை எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது பொறுப்பில் நாம் முன்னேற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன், ”என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...