தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!

Date:

இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய வேலைவாய்ப்பு தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், இவ்வருடத்திற்கான அதிகூடிய வேலைவாய்ப்பு ஒதுக்கீடு தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளது.

6500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக வாராந்தம் 200 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படுகின்றனர் என்றார்.

“தென்கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்காக 109 இலங்கையர்கள் நேற்று சென்றுள்ளதுடன், மேலும் 65 இலங்கையர்கள் நாளையும், மேலும் 28 இலங்கையர்கள் நாளை மறுநாள் புறப்படுவார்கள்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...