மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் அனைத்து மஸ்ஜிதுகளின் பாதுகாப்புக்காக துஆ செய்யுங்கள்: உலமா சபை வேண்டுகோள்

Date:

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்ற அனைத்து மஸ்ஜிதுகளுக்கும் உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் குறிப்பாக அல் அக்ஸா மஸ்ஜிதைச் சூழ வாழ்கின்ற பலஸ்தீன் மக்களுக்காகவும் சகல வணக்கங்களின் போதும் குறிப்பாக இரவு நேர வணக்கங்களின் போதும் துஆச் செய்யுமாறு கண்ணியத்துக்குரிய இமாம்கள், ஹாபிழ்கள், மற்றும் சகல முஸ்லிம்களிடமும் ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் தாஸீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஸ்ஜித்கள் அல்லாஹு தஆலாவின் இல்லங்களாகும். அவற்றை கண்ணியப்படுத்துவதும் பேணிப்பாதுகாப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் நல்லெண்ணப் பிரயாணங்கள் மேற்கொள்ளப்படாது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறியுள்ளார்கள்.

இப்புனிதத் தலங்கள் மூன்றையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் முஸ்லிம் உம்மத்தின் நம்பிக்கைக் கோட்பாடு (அகீதா) ரீதியான கடமையாகும் எனவும் அவர் அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...