மே 1ஆம் திகதிக்கு பின்னர் முட்டை விலை குறையும்!

Date:

மே முதலாம் திகதிக்கு பின்னர் தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட குறைவான விலையில் முட்டையின் விலையை குறைக்க தயாராக இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் முதல் விலையை குறைப்பதற்கு அதிகாரிகளின் தலையீடு தேவையில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையானது தற்போது முட்டைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்துள்ள போதிலும், விநியோகம் மற்றும் தேவைக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏழு முதல் எட்டு மாதங்களாக முட்டை உற்பத்தியாளர்களை குறிவைத்து வருகிறது, ஆனால் நடைமுறையில் விலையை குறைக்க தவறிவிட்டது.

பண்டிகைக் காலங்களில் தேவை அதிகமாக காணப்படுவதாகவும் அதனால் முட்டையின் விலை அதிகரிப்பது இயல்பானது எனவும் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...