வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்!

Date:

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டை சுற்றி நிலவும் காற்றின் ஓட்டம் மிகவும் பலவீனமாக உள்ளதால், சுற்றுச்சூழலின் வெப்பநிலை உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள  துணை இயக்குநர் மெரில் மெண்டஸ் தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் வெப்பமான காலநிலை அதிகமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெப்பமான காலநிலை நிலவும் இக்காலத்தில் இயற்கையான திரவ உணவைப் போன்று தண்ணீரையும் அதிகமாகப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...