வெளிநாட்டு தொழிலாளர்களால் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது!

Date:

உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொழிலாளர்களால் அனுப்பட்ட பணம் கடந்த மாதம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.

பெப்ரவரியில், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது, மார்ச் மாதத்தில் இந்தத் தொகை 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, மார்ச் 2022 இல் இலங்கைக்கு 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 2022 உடன் ஒப்பிடுகையில், தொழிலாளர்கள் அனுப்பும் பணமானது கடந்த மாதம் 78.5 சதவீதம் அல்லது 249.9 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு 1,413.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...