நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளின் கட்டணங்களையும் திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சக்கரங்களைக் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.