அனைத்து மதத்தினரின் ஆதரவுடன் புத்தளத்தில் தேசிய வெசாக் விழா!

Date:

இந்த ஆண்டுக்கான தேசிய வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் அனைத்து மதத்தினரின் ஆதரவுடன் கூட்டு நிகழ்ச்சியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் சமய விவகாரங்கள் மற்றும் சகவாழ்வுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பங்களிப்பு, நோக்கம், எதிர்கால வேலைத்திட்டம் மற்றும் பிரச்சனைகளை அடையாளம் காண்பது தொடர்பாக நடைபெற்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் பௌத்த அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் தொடர்பான எதிர்வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மதங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தற்போதுள்ள கலாச்சார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் தேவையான சட்டத்தை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அமைச்சு வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கும் தேவையான செயற்பாடுகளுக்கு துறைசார் கண்காணிப்புக் குழு ஆதரவளிப்பதாகவும், தேவைப்பட்டால் அமைச்சரும் இக்குழுவில் ஈடுபடுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குழுவின் தலைவர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...