அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Date:

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமழான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள் இருந்தவர்களை இஸ்ரேல் பொலிஸார் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

மசூதிக்குள் நடந்த தாக்குதலுக்கு பலஸ்தீன அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர்கள் பட்டாசுகள், கற்களுடன் மசூதிக்குள் புகுந்ததால், தாங்களும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி யதாகவும் இஸ்ரேல் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான பெய்ட் உம்மரில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தனர் மற்றும் இஸ்ரேலிய வீரர்கள் மீது பாறைகள் மற்றும் வெடிபொருட்களை வீசியதாக சர்வதேச ஊடகஙகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...