இனப்பெருக்க நோக்கங்களுக்காகவே குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப ஏற்பாடு: விவசாய அமைச்சு

Date:

குரங்குகள் இனப்பெருக்க நோக்கத்திற்காக சீனாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விவசாய அமைச்சு இன்று தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Animal Breeding Limited என்ற சீன நிறுவனம் 100,000  குரங்குகளை கோரியதாக அவர் கூறினார்.

கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகம் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மையத்தை திறந்துதுள்ளதாகவும் குரங்குகளை ஏற்றுமதி செய்வது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத் துறையினர், மதத் தலைவர்கள், விஞ்ஞானிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான மற்றும் சிறந்த யோசனைகளை சேகரிக்கும் அதே வேளையில்,  குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும்போது சிறந்த முடிவை எடுக்க அமைச்சகம் நம்புகிறது.

குரங்குகளால் பெருமளவிலான பயிர்கள் அழிக்கப்படும் பிரதேசங்களில் இருந்து குரங்குகளை அகற்றுவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

காடுகள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளில் இருந்து குரங்குகளை அகற்றும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...