இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம்!

Date:

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று  எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும் அபிவிருத்தி முகவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவற்றிலிருந்து இந்த செயல்முறைக்கு உதவி பெறப்படும்,

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...