‘ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை’: கொழும்பு பேராயர்

Date:

அரசியல் வாதிகள் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு தாங்கள்தான் முதலாளி என நினைப்பதாகத் தெரிகிறது என கொழும்பு, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை, நீதிக்காக போராடுவது முக்கியமானது எனவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் என்ன நடந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்றும், மக்கள் பல விஷயங்களைச் சொல்கிறார்கள் என்றும், அதனால்தான் நீதிக்காகப் போராடுவது முக்கியம் என்றும் பேராயர் கூறினார்.

சிலர் மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் இருக்கும் முறையை தொடரட்டும் என்று கூறினாலும் இளைஞர்கள் போராடி இலங்கையின் அரசியல் முறையை மாற்றினார்கள் என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...