உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25இல் நடத்த முடியாது: ஆணைக்குழு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலோ அல்லது நிதி ஒதுக்கீடு அடிப்படையிலோ தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது.

உள்ளூராட்சித் தேர்தலை 25ஆம் திகதி நடத்துவது கடினமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...