கடந்த புத்தாண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது!

Date:

கடந்த வருடத்தை விட இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சுபமானதாக அமைந்திருப்பதாகவும், அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கும் இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட 26 புதிய பஸ்களை கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் நாடு ஒரு நிலையான நிலையை எட்டுவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்கள் அரசியல் தீர்மானங்களுக்கு செல்லாமல் துணிச்சலுடன் வலிமிகுந்த நடவடிக்கைகளை எடுத்ததே பிரதான காரணம் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் பலமில்லாத போதும் சலுகைகளை வழங்குவதே பல நெருக்கடிகளுக்குக் காரணம் எனவும், உலகில் நாடு மூலை முடுக்கப்படாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் ஊடாக அதிலிருந்து விடுபட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

டொலருக்கான ரூபாவின் தொகை குறைவடைந்துள்ளமையினால் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய நிவாரணம் ஏற்படும் எனவும் அங்குள்ள மக்களுக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  .குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...