கொழும்பில் பல இடங்களில் நீர் விநியோகம் தடை!

Date:

கோட்டே ஜூப்லி நீர் தாங்கிக்கு நீரேந்திச் செல்லும் பிரதான குழாயில் பத்தரமுல்லை பொல்தூவ பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடுவெல, கோட்டை, மஹரகம, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும் இன்றிரவு 09 மணி வரை நீர்விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் கசிவை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை முன்னெடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...