சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Date:

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

சவூதி அரேபிய அரசாங்கம் போர்ட் சூடான் நகரில் உள்ள சிறப்பு பாதுகாப்பான ஹோட்டலில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் அந்த இடத்திற்கு வந்து சூடானில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இதேவேளை, சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு நேற்று (26) தெரிவித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...