சூடானில் 72 மணித்தியால போர் நிறுத்தம் !

Date:

சூடானில் நேற்று நள்ளிரவிலிருந்து 72 மணித்தியால போர் நிறுத்தத்திற்கு மோதலில் ஈடுபடும் தரப்பினர் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன்(Antony Blinken0 தெரிவித்துள்ளார்.

சூடானிய இராணுவம் மற்றும் RSF எனப்படும் துணை இராணுவப் படை ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் இந்த மாதம் மோதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அறிவிக்கப்படும் மூன்றாவது போர் நிறுத்தமாக இது அமைந்துள்ளது.

இந்த மோதல்கள் காரணமாக 400 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமது இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளை வௌியேற்றும் நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...