ஜப்பானிய பண்ணைகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

Date:

ஜப்பானிய பண்ணைகளில் இலங்கை மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் பணிகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் முழுவதிலும் உள்ள பண்ணைகள் அதிகளவில் தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள தற்காலிக தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள தயாராகவிருக்கின்றன.

உள்ளூரில் பணியாளர்களின் வெற்றிடங்களே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 12 துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை ஈர்ப்பதற்காக ஜப்பான் ஏப்ரல் 2019 இல் தனது குறிப்பிட்ட திறமையான பணியாளர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

எனினும் தொழிலாளர்கள் ஜப்பானிய மொழி சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு வகை பணியாளர் ஐந்து ஆண்டுகள் வரை தங்கலாம் ஆனால் அவர்களது குடும்பத்தை நாட்டிற்கு அழைத்து வரமுடியாது.

இரண்டாவது பிரிவினர் நீண்ட காலம் ஜப்பானில் தங்கி, குடும்ப உறுப்பினர்களுடன் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேவேளை குடிவரவு சேவைகள் தரவுகளின்படி, ‘குறிப்பிட்ட திறமையான தொழிலாளி’ அந்தஸ்துள்ள 10வீதத்துக்கும் குறைவானவர்கள் தற்போது பண்ணைகளில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...