தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருள்!

Date:

வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் சினோபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் என்ற மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலையை விட கணிசமான குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பாக அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே அரசு தரப்பு உடன்பாடு எட்டப்பட்டு அதன் பிறகு குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

அந்த நிலையில், போட்டிச் சந்தை உருவாகி, கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தேவை குறைந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை தணியும் என எரிசக்தி அமைச்சு கணித்துள்ளது.

தற்போது, ​​அரசாங்கம் எரிபொருள் இறக்குமதிக்காக மாதத்திற்கு சராசரியாக 450 மில்லியன் டொலர்களை செலவழித்து வருகிறது, மேலும் மூன்று புதிய நிறுவனங்களும் தலா 120 மில்லியன் டாலர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் இறக்குமதி செலவை குறைக்க முடியும் என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...