தேசிய வெசாக் நிகழ்வுக்காக அலிசப்ரி ரஹீம் 7 இலட்சம் ரூபா அன்பளிப்பு!

Date:

எதிர்வரும் தேசிய வெசாக் நிகழ்வுக்காக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஏழு இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளார்.

புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விழா தொடர்பான கூட்டத்தில் மேற்படி உதவித்தொகைக்கான காசோலையை பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் மாவட்ட செயலாளரிடம் கையளித்தார்.

தேசிய வெசக் பண்டிகை இம்முறை புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் புத்தளம் மவாட்டச் செயலகத்தினால் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் , சமகாலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அரச நிறுவனங்கள் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதால் மேற்படி வெசக் பண்டிகைக்கான செலவுகளுக்கு பணம் திரட்டுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோகியுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் எஸ்.எச்.எம்.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் தெரிவித்திருந்தார்.

புத்தளம் மாவட்டச் செயலாளரின் வேண்டுகோளுக்காக இந்த விடயத்தை கருத்தில் கொண்டு புத்தளம் மாவட்டதில் வசிக்கும் சகல இன மக்களின் சகவாழ்வுக்காக மேற்படி பண்டிகைக்காக ஏழு இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...