நாட்டின் மத பன்முகத்தன்மைக்கு ரமழான் புதிய அர்த்தத்தை அளிக்கிறது: பிரதமரின் வாழ்த்து செய்தி

Date:

எமது முஸ்லிம் சமூகம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்திற்கு எந்தப் பாத்திரமும் இல்லாத நல்லொழுக்கமுள்ள இலங்கை சமூகத்திற்காக எமது மத போதனைகளை உறுதியாகக் கடைப்பிடிப்போம் என பிரதமர் தினேஷ் குணவர்தன ரமழான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

பழங்காலத்திலிருந்தே, ரமழான் காலத்தில், முஸ்லிம் சமூகம் தங்கள் மத சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

மேலும் நாட்டிலுள்ள கலாசார மற்றும் மத பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை அளித்து ஏனையவர்களுக்கு உதவுகிறது.

எனவே, உலகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இவ்வேளையில், சுமை சுமக்கும் மக்களிடையே மனிதாபிமானம் உருவாகும் ஒரு இனிமையான சூழலை உருவாக்க ரமழான் சாதகமான சூழலை வழங்குகிறது.

நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகள், வர்த்தகத் துறைகள் மற்றும் கல்வி, விளையாட்டு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆற்றிவரும் பங்களிப்புக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்த தனித்துவமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் அன்பான அர்ப்பணிப்பு, ஒரு தேசமாக நாம் தற்போது கடந்து வரும் மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்ள அனைத்து இனங்களின் ஒற்றுமையையும் செயலூக்கமான பங்களிப்பையும் தொடர்ந்து பலப்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.” அனைவருக்கும் ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...