நாட்டில் பரவும் காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Date:

காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாட்களில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் உயிரைக் கூட இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க, இந்த நாட்களில் மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இன்றைய நாட்களில் பொதுமக்களிடையே அதிகம் காணப்படுவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நோய்கள் தொற்றக்கூடியவை, இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...