பாரிஸில் தொடர் கொள்ளை சம்பவங்கள் : இளம் பெண் உட்பட பதினொரு பேர் கைது!

Date:

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் Blanc- Mesnil நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிகளில் பாரிஸில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து அங்குள்ள பல பெறுமதியான நகைகள், பணம் போன்றவற்றைத் கொள்ளையிட்டுள்ளார்.

மொத்தமாக 7 மில்லியன் யூரோக்கள் வரை அவர் கொள்ளையிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் 19 வயதுடையவர் எனவும், அவருடன் சேர்த்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பதினொரு பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...