புருனே நாட்டிலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வு

Date:

புருனே நாட்டில் வசிக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று (8) இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தனர்.

உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் எல்லா இடங்களில் தங்களுடைய ரமழானுடைய முக்கியமான வணக்கமாக இருக்கின்ற நோன்பு திறக்கும் நிகழ்வை பல்வேறு விதமான முறையிலேயே அனுஸ்டித்து வருகின்றார்கள்.

இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் தங்களுடைய சமூக ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் சமகால விவகாரங்களையும் கருத்து பரிமாற்றுங்களுக்கான சந்தர்ப்பமாகவும் தமக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை பலப்படுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் நேற்று  புருனே நாட்டில் பெர்பி என்ற இடத்தில் Wafa hotel-லில் மனிதநேய சொந்தங்களின் ஏற்பாட்டில் ‘இஃப்தார் -நோன்பு துறப்பு ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் மனிதநேய ஜனநாயக் கட்சின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும் புருனே யில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும்  இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...