மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன மேற்கத்திய நாடுகள் : பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ!

Date:

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவிக்கையில்,

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு என்பது அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றது.

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு தான் மூன்றாம் உலகப் போரைத் தூண்டுகின்றது. ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளையும் நிபந்தனை இல்லாத பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,

லுகாஸ்ஷென்கோவின் கருத்துகளை ரஷ்யா கவனித்ததாகவும், ஜனாதிபதி விளாடிமிர் புதின் அடுத்த வாரம் அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது என்றும் புதின் கூறியிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...