மெதகெகிய ஸ்ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா!

Date:

தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கழக உறுப்பினர்களுக்கு இடையிலான MPL – 2023 கிரிக்கெட் தொடர் இம்முறையும் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக பொது மைதானத்தில் கடந்த 23 மற்றும் 24ம் திகதிகளில் இடம்பெற்றது.

லீக் முறையில் இடம்பெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் சாம்பியனாக மனாப் அவர்களின் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணி முடி சூடிக்கொண்டது.

இரண்டாம் இடத்தை சிபான் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துக் கொண்டது.

இந்த தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ரெட் பெக்ஸ் அணியின் தலைவர் சியாம் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து வீச்சாளராக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணியின் சப்ராத் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிப்லான் தெரிவானார்.

(பவாஸ் – தகவல் அதிகாரி – அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...