ராம நவமி வன்முறை: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சிக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்

Date:

இந்தியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தனது அதிகாரபூர்வ இணைய தளத்திலேயே இந்த கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை  தலைமைச் செயலகம் கண்டிக்கிறது.

ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தீவிரவாத ஹிந்து கும்பல் ஒன்று, கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி பீகார் ஷெரீப்பில் மதரஸா மற்றும் அதன் நூலகத்தை எரித்தது உட்பட பல வன்முறை மற்றும் நாசவேலைகளை ஈடுபட்டுள்ளதை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  தலைமைச் செயலகம் ஆழ்ந்த கவலையுடன் அவதானித்தது.

இந்நிலையில், அமைப்பின் தலைமைச் செயலகம் இத்தகைய ஆத்திரமூட்டும் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் மீதான இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முறையான இலக்குகளின் மீதான தெளிவான தாக்குதல் வெளிப்பாடாகும்.

இதுபோன்ற வன்செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, பாதுகாவல், உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், இந்திய அதிகாரிகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகம் குறித்த அறிக்கையில் கேட்டுக்கொள்கிறது.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...