14 வருடங்களின் பின்னர் மலேரியா நோயினால் முதல் மரணம் பதிவாகியது!

Date:

14 வருடங்களின் பின்னர் இலங்கையில் மலேரியா மரணம் பதிவாகியுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவரே மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் தாமர களுபோவில தெரிவித்துள்ளார்.

வருடத்தின் கடந்த 4 மாதங்களில் இலங்கையில் 11 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா எதிர்ப்பு பிரசாரம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 37 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பிரசார திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...