15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு

Date:

இலங்கையர்கள் 15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலிய சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையே 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தாதியர் சேவைக்கான 51 ஆவது குழுவாக இந்த 15 இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 302 இலங்கையர்கள் தாதியர் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, இந்த வேலைவாய்ப்பானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படும் எனவும், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு வௌிநபருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...