15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு

Date:

இலங்கையர்கள் 15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலிய சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையே 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தாதியர் சேவைக்கான 51 ஆவது குழுவாக இந்த 15 இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 302 இலங்கையர்கள் தாதியர் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, இந்த வேலைவாய்ப்பானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படும் எனவும், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு வௌிநபருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...