2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை !

Date:

ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடந்த வருடம் (2022) ஜூன் மாதம் 22 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு 05 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது.

அதன்படி, கடந்த 1ஆம் திகதி வரை உள்நாட்டு விடுமுறைக்கான 150 விண்ணப்பங்களும், வெளிநாட்டு விடுமுறைக்கான 1000 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாத்திரம் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கலாம் எனவும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

பல அரச ஊழியர்கள் கொரியாவுக்குச் செல்வதற்காக வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்கின்றனர் மற்றும் பெரும்பாலான விண்ணப்பங்கள் மொழிப் பிரச்சினை காரணமாக நிராகரிக்கப்படுகின்றன.

எனினும், மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு மீண்டும் விண்ணப்பிப்பார்கள், அதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும், அதன்படி, வெளிநாட்டு விடுப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம், என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார் .

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...