IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான வாக்கெடுப்பு இன்று!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் தொடர்பாக அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கையின் மீது பாராளுமன்றம் இன்று வாக்களிக்கவுள்ளது.

குறித்த மூன்று நாள் விவாதம் முடிவடைந்ததை அடுத்து இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கையைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் புதன்கிழமை ஆரம்பமானது.

சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் பிரதான கொள்கை நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.

IMF உடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தம் தொடர்பான பிற ஆவணங்கள் மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

Popular

More like this
Related

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...