TEXPO எனப்படும் மிகப்பெரிய கண்காட்சியான சர்வதேச ஆடைக் கண்காட்சி 2023 மே 26 – 28 கராச்சியில் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள எக்ஸ்போ மையத்தில் நடைபெறும்.
ஆடை மற்றும் தோல் துறையில் உற்பத்திக்கள் உள்ளிட்ட பல வர்த்தக பொருட்களை கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
TEXPO இன் 4வது கண்காட்சியான பாகிஸ்தானின் ஆடை மற்றும் தோல் துறையில் நிலைத்தன்மையை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன் தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்களை சந்திக்க பொதுவான தளத்தை வழங்குகிறது.
‘நிலைத்தன்மைக்கு வழி நெசவு’ என்ற கருப்பொருளின் கீழ், டெக்ஸ்போ பாகிஸ்தான் 2023 கண்காட்சி, பாகிஸ்தானின் ஆடை மற்றும் தோல் துறையில் நிலையான நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புக்களை முன்னிலைப்படுத்தவுள்ளது.
அத்தோடு, இது சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூக உணர்வுள்ள பொருட்களுக்கான உலகளாவிய தேவையை பிரதிபலிக்கிறது, மேலும் நீடித்த புடவை மற்றும் தோல் உற்பத்தியில் பாகிஸ்தானை முன்னணி வீரராக நிலைநிறுத்துகிறது.
TEXPO பாகிஸ்தான் என்பது ஆடைகள், வீட்டு புடவைகள், துணிகள், நூல், டெனிம், விளையாட்டு உடைகள், கையுறைகள், பாதணிகள், தரைவிரிப்புகள், உதிரிப்பாகங்கள், மற்றும் பலவற்றை உற்பத்தி செய்பவர்கள், வழங்குபவர்கள் பெறுபவர்கள் என அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வாகும்.
இந்த நிகழ்வு பாகிஸ்தானின் முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்களிடமிருந்து நேரடியாக பொருட்களைப் பெறுவதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.
TEXPO பாகிஸ்தான் ஒரு கண்காட்சி மட்டுமல்ல, அறிவு பகிர்வு மற்றும் நெட்வொர்க்கிங்கிற்கான தளமாகவும் உள்ளது.
கண்காட்சியுடன், தொடர்ச்சியான கருத்தரங்குகள், பேஷன் ஷோக்கள், கூட்டங்கள் மற்றும் பெஸ்போக் காட்சிகள் ஆகியவை, தொழில் வல்லுநர்களுக்கு கருத்துப் பரிமாற்றம் மற்றும் அர்த்தமுள்ள வணிக கூட்டாண்மைகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை இந்த கண்காட்சி மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதேவேளை ‘டெக்ஸ்போ பாகிஸ்தானின் வரவிருக்கும் மாபெரும் கண்காட்சியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் பாகிஸ்தானின் ஆடை மற்றும் தோல் துறையில் சிறந்த உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவோம்’ என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.