இந்தோனேஷியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: 11 பேர் உயிரிழப்பு: பலர் மாயம்

Date:

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது.

குறைந்தது 78 பேரை ஏற்றிச் சென்ற விரைவுப் படகு நீரில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

காணாமல் போன ஒன்பது பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

படகு புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மரத்தில் மோதியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு விபத்து அடிக்கடி நடைபெறும்.

2018 ஆம் ஆண்டில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஆழமான ஏரியில் சுமார் 200 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 167 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...