இனப்பெருக்க நோக்கங்களுக்காகவே குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப ஏற்பாடு: விவசாய அமைச்சு

Date:

குரங்குகள் இனப்பெருக்க நோக்கத்திற்காக சீனாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விவசாய அமைச்சு இன்று தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Animal Breeding Limited என்ற சீன நிறுவனம் 100,000  குரங்குகளை கோரியதாக அவர் கூறினார்.

கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகம் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மையத்தை திறந்துதுள்ளதாகவும் குரங்குகளை ஏற்றுமதி செய்வது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத் துறையினர், மதத் தலைவர்கள், விஞ்ஞானிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான மற்றும் சிறந்த யோசனைகளை சேகரிக்கும் அதே வேளையில்,  குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும்போது சிறந்த முடிவை எடுக்க அமைச்சகம் நம்புகிறது.

குரங்குகளால் பெருமளவிலான பயிர்கள் அழிக்கப்படும் பிரதேசங்களில் இருந்து குரங்குகளை அகற்றுவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

காடுகள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளில் இருந்து குரங்குகளை அகற்றும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...