உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் ராகுல் காந்தி!

Date:

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று (22) தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

பங்களாவை விட்டு வெளியேற காரில் ஏறும் முன், 19 ஆண்டுகளாக இந்த பங்களாவை கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், உண்மையைப் பேசியதற்கு விலையாக பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

உண்மையை பேசியதற்காக எந்த இழப்பீடும் கொடுக்க தயார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் கிடைத்த அதிகாரபூர்வ பங்களாவை ஏப்ரல் 22-ம் திகதி முன் காலி செய்யுமாறு லோக்சபா வீட்டு வசதி வாரியம் ராகுல் காந்தியிடம் தெரிவித்திருந்தது.

கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதாலும் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் மார்ச் 24 அன்று அறிவித்தது.

2004-ல் ராகுல் காந்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த அரசு பங்களாதான் இப்போது வரை அவரது வீடாக இருந்தது.

ஜன்பத்தில் உள்ள தனது தாய் சோனியா காந்தியின் வீட்டிற்கு தற்காலிகமாக செல்லவுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...