உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் ராகுல் காந்தி!

Date:

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று (22) தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

பங்களாவை விட்டு வெளியேற காரில் ஏறும் முன், 19 ஆண்டுகளாக இந்த பங்களாவை கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், உண்மையைப் பேசியதற்கு விலையாக பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

உண்மையை பேசியதற்காக எந்த இழப்பீடும் கொடுக்க தயார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் கிடைத்த அதிகாரபூர்வ பங்களாவை ஏப்ரல் 22-ம் திகதி முன் காலி செய்யுமாறு லோக்சபா வீட்டு வசதி வாரியம் ராகுல் காந்தியிடம் தெரிவித்திருந்தது.

கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதாலும் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் மார்ச் 24 அன்று அறிவித்தது.

2004-ல் ராகுல் காந்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த அரசு பங்களாதான் இப்போது வரை அவரது வீடாக இருந்தது.

ஜன்பத்தில் உள்ள தனது தாய் சோனியா காந்தியின் வீட்டிற்கு தற்காலிகமாக செல்லவுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...