உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25இல் நடத்த முடியாது: ஆணைக்குழு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலோ அல்லது நிதி ஒதுக்கீடு அடிப்படையிலோ தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது.

உள்ளூராட்சித் தேர்தலை 25ஆம் திகதி நடத்துவது கடினமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...