எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைசேரி இன்னும் வழங்காததால், எதிர்வரும் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.