கடும் வெப்பத்துடனான காலநிலை: பொது மக்களுக்கான எச்சரிக்கை!

Date:

கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லிமீற்றர் நீர் அருந்த வேண்டும் என சுகாதாரத்துறை பொதுமக்களை கோரியுள்ளது.

இதன்மூலம் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என விஷேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

மதிய நேரங்களில் தாகம் எடுப்பதற்கு முன்னதாக நீரை அருந்த வேண்டும்.

அத்துடன் அதிகளவான நீரை பருக வேண்டும். இதுதவிர, நீர்ச்சத்து குறைப்பாடு ஏற்படுமாயின் அதனை இலகுவாக இனங் காணமுடியும். வெளியேறும் சிறுநீரகத்தின் நிறம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அதேநேரம், பொது வெளியில் பணிபுரிபவர்கள் தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு அங்கிகளை அணிவது சிறந்த விடயம் என விஷேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...